சென்னை, தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மோப்பநாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் கமலாயத்தில் நடத்திய தீவிர சோதனையில் மிரட்டல் செய்தி புரளி என கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரின் செல்போன் எண்ணை ஆய்வு செய்ததில் வேலூர் மாவட்டத்தில் இருந்து வந்தது என கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மிரட்டல் விடுத்தவர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.