சண்டிகர் மேயர் தேர்தலில் வாக்குகள் திருடப்பட்டு
பாஜக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், கடந்த சில ஆண்டுகளாகவே தேர்தல்களில்
பாஜக முறைகேடுகள் செய்வதாக நாம் கேள்விப்பட்டோம். தற்போது, அவர்கள் வாக்குகளைத் திருடும்போது கையும் களவுமாக சிக்கியுள்ளனர். மேயர் தேர்தலிலேயே இவ்வாறு முறைகேடு செய்கிறார்கள் என்றால் சட்டப்பேரவை, மக்களவைத் தேர்தல்களில் என்னவெல்லாம் அவர்கள் செய்வர் . அதிகாரத்துக்காக அவர்கள் நாட்டையே விற்கவும் செய்வர் என்று கூறினார்.