ஏடிஎம் இயந்திரம் திருட்டு.. கொள்ளையர்கள் கைவரிசை

61பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் பீட் மாவட்டம் தரூரில் நேற்று (ஜூன் 22) திருடர்கள் நான்கு பேர் ஸ்டேட் வங்கி ஏடிஎம்-க்குச் ரெயின்கோட் அணிந்து நுழைந்தனர். பின்னர், அங்கிருந்த ஏடிஎம் இயந்திரத்தை கயிறு மூலம் கட்டி காருடன் இணைத்து இழுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து வங்கி ஊழியர்கள் அளித்த புகாரின் பேரில் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். அதன்பின்னர், சுமார் 4 மணி நேரம் தேடுதல் வேட்டைக்குப் பிறகு 21 லட்சத்துக்கும் அதிகமான பணம் மற்றும் ஏடிஎம் இயந்திரத்தை மீட்டனர். தொடர்ந்து தப்பியோடிய திருடர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.