சுரங்க பாதை கேட்டு பொதுமக்கள் மனு

69பார்த்தது
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வேம்புகுடி கிராமத்தில் உள்ள தென்னவன்நல்லூர் பகுதியில் விக்கிரவாண்டி-கும்பகோணம் பைபாஸ் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் அப்பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வந்த மயான பாதை அடைக்கப்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் பாதை அமைத்து தர அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அப்போது அதிகாரிகள் பாதை அமைத்து தர முடியாது என கூறியதால் ஆத்திரம் அடைந்த அப்பகுதிமக்கள் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.

மேலும் மயானத்திற்கு பாதை அமைத்து தர வலியுறுத்தி உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கோட்டாட்சியர் ஷீஜாவிடம் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இச்சம்பவம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்தி