ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய மற்றொரு அதிமுக பிரமுகர்

66பார்த்தது
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிக்கிய மற்றொரு அதிமுக பிரமுகர்
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை 15 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ஹரிதரன் என்பவர் உட்பட மேலும் 5 பேரைப் பிடித்து போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் பேரூராட்சியின் அதிமுக கவுன்சிலராக ஹரிதரன் உள்ளார். இவரிடமிருந்து 5 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள வழக்கறிஞர் அருள் மற்றும் ஹரிஹரனின் நெருங்கிய நண்பர் ஹரிதரன் என தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி