சிவில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தை வழங்கும் அதிகாரத்தை ஓ.பி.எஸ். இ.பி.எஸ்-க்கு தரக்கூடாது என இந்திய தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் ஆதித்தன், சுரேன் பழனிசாமி அளித்துள்ள மனுவில், ஈரோடு (கி) இடைத்தேர்தலில் வழங்கியது போல தற்போதும் படிவத்தில் கையெழுத்திடும் அதிகாரத்தை அவைத்தலைவர் தமிழ்மகன் உசைனுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.