65 வயது முதியவரை காதலித்த 19 வயது இளம் பெண்

86831பார்த்தது
65 வயது முதியவரை காதலித்த 19 வயது இளம் பெண்
மேற்கு வங்க மாநிலத்தில் 65 வயது முதியவரை 19 வயது பெண் காதலித்து வந்த நிலையில், இருவரும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள துபுரியில் திருமணமாகி குழந்தைகளைப் பெற்ற 65 வயது முதியவர் ஒருவரை அப்பகுதியைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் காதலித்து வந்துள்ளார். இவர்களது உறவுக்கு குடும்பத்தினரும், அப்பகுதி மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் உறவை சமூகம் ஏற்கவில்லை என்ற வேதனையில் வீட்டின் முன் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணையை தொடங்கினர்.