சிறுமி பலாத்கார சம்பவம் - சாதி வன்கொடுமை வழக்குப்பதிவு

58பார்த்தது
சிறுமி பலாத்கார சம்பவம் - சாதி வன்கொடுமை வழக்குப்பதிவு
உடுமலைப்பேட்டையில் 17 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் மீது இன்று (மே 15) சாதிய வன்கொடுமை தடுப்பு பிரிவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரண்டு சிறுவர்கள் உட்பட 7 பேர் மீது சாதி வன்கொடுமை தடுப்பு பிரிவில் கூடுதலாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறுமி வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் போக்சோ சட்டத்தில் 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சிறுமி 4 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.