சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 பொதுத்தேர்வுகள்..!

52பார்த்தது
சிபிஎஸ்இ மாணவர்களுக்கு 2 பொதுத்தேர்வுகள்..!
வரும் கல்வியாண்டு 2024-2025 முதல் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்களுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த புதிய நடைமுறையின்படி 10, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இரண்டு பொதுத்தேர்வுகள் நடைபெறும். அவற்றில் எதில் அதிக மதிப்பெண் கிடைக்கிறதோ, அதையே இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்களிடம் பொதுத்தேர்வு குறித்த பயத்தை போக்கும் நோக்கில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. முதல் பொதுத்தேர்விலேயே நல்ல மதிப்பெண் பெறுவேன் என்ற நம்பிக்கை இருந்தால், மாணவர்கள் இரண்டாம் தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு பெற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி