தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு டெங்கு.! அமைச்சர் மா.சு தகவல்

73பார்த்தது
தமிழ்நாட்டில் 11,538 பேருக்கு டெங்கு.! அமைச்சர் மா.சு தகவல்
தமிழ்நாட்டில் நடப்பாண்டில் இதுவரை 11,538 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், காய்ச்சல் பாதித்தவர்களில் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். டெங்கு பரவலை தடுக்க தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும், டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி