+1 தேர்வு முடிவுகள்: சரிவை சந்தித்த திருப்பூர் மாவட்டம்

57பார்த்தது
+1 தேர்வு முடிவுகள்: சரிவை சந்தித்த திருப்பூர் மாவட்டம்
இன்று (மே.14) வெளியான பிளஸ்-1 தேர்வு முடிவில் தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் 24,917 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 1702 பேரும், மாணவிகள் 4237 பேரும், இருபாலர் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் 18,978 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதன் மூலம் திருப்பூர் மாவட்டம் 95.23 சதவீதம் பெற்று மாநில அளவில் 3-வது இடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. முதல் இரண்டு இடங்களில் கோவை, ஈரோடு உள்ளது. கடந்தாண்டு திருப்பூர் மாவட்டம் 96.38 சதவீதம் பெற்று முதலிடத்தை பிடித்தது.