இந்நிலையில் அன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்த ஆசிரியை அன்பழகி வீட்டின் கதவு திறந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இருவரும் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது சூட்கேஸில் வைத்திருந்த 5 சவரன் டாலர் செயின், வளையல்கள், சிறிய வகை செயின், தங்க காசு உள்ளிட்ட 7 வகையான 43 சவரன் தங்க நகைகள் காணாமல் போயிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இச்சம்பவம் குறித்து அன்பழகி குளித்தலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். குளித்தலை டிஎஸ்பி செந்தில்குமார் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் அரசு பள்ளி ஆசிரியையின் வீட்டில் வாடகைக்கு வசிக்கும் ரத்தினவேல் மனைவி சுகந்தி (39) என்பது தெரியவந்தது. அவரிடம் இருந்து 43 சவரன் தங்க நகைகளை மீட்டு அவர் கைது செய்யப்பட்டு குளித்தலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார்.