இந்நிலையில் சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழாவுக்கு அந்த நபருடன் சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இதை அவரது கணவர் கண்டித்துள்ளார். இதனால் விரக்தி அடைந்த வெண்ணிலா வீட்டில் யாரும் இல்லாதபோது சேலையால் மின்விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலாவுதீன் வழக்கு பதிந்து, உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்பூசணி பழங்களில் ரசாயனம் - ஆபத்து