நிலவுக்கு மனிதர்களை அனுப்புவதற்காக NGLV (Next Generation Launch Vehicle) என்ற பிரமாண்ட ராக்கெட் தயாரிக்கப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் தெரிவித்தார். அதற்கு 'சூர்யா' என்று பெயர் வைத்துள்ளார். திரவ ஆக்சிஜன் மற்றும் மீத்தேன் அடிப்படையில் இந்த எஞ்சின் தயாரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் LEO பேலோட் திறன் 40 டன்களுக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. 2040ஆம் ஆண்டுக்குள் நிலவின் மேற்பரப்பிற்கு எடுத்துச் செல்லப்படும் என்று கூறப்பட்டுள்ளது.