முன்னாள் பிரதமரும், சமூக நீதிக் காவலருமாக போற்றப்படும் வி.பி.சிங்கின் 94-வது பிறந்தநாளையொட்டி, அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள வி.பி.சிங் சிலைக்கு அருகில் வைக்கப்பட்டுள்ள திருவுருவப் படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவருடன் அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், சக்கரபாணி, ராஜகண்ணப்பன், மேயர் பிரியா, அரசு செயலாளர் இல.சுப்பிரமணியன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் வைத்திநாதன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.