விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனியார் பள்ளியில் வைத்து நடைபெற்ற தமிழ்நாடு மாநில ஓபன் கராத்தே போட்டியை அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் துவக்கி வைத்தார்.
இந்த கராத்தே போட்டியில் மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம் உள்ளிட்டா 14 மாவட்டங்களில் இருந்து 80 க்கும் மேற்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் 800க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விளையாடினர்.
கராத்தே விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளிகளுக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் மான்ராஜ் பரிசுகளையும், கோப்பைகளையும் வழங்கினார்.