சிவகாசி: வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..

73பார்த்தது
சிவகாசி: வளர்ச்சி பணிகளை நேரில் ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர்..
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
விருதுநகர் மாவட்டம்,
சிவகாசி மாநகராட்சியில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் வீ. ப. ஜெயசீலன் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகாசி ஸ்டாண்டர்டு காலனியில் அம்ரூத் 2. 0 திட்டத்தின் கீழ் ரூ. 38 இலட்சம் மதிப்பில் குழந்தைகள் பூங்கா மற்றும் விளையாட்டுக் களம், 15-வது நிதிக்குழு மானியத்தின் தேசிய நகர்ப்புற சுகாதார பணியின் கீழ் ரூ. 30 இலட்சம் மதிப்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார மையம், திருத்தங்கலில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 1. 50 கோடி மதிப்பில் நவீன எரிவாயு தகன மேடை, கழிப்பறை மற்றும் வாகன நிறுத்தம் அமைக்கப்பட்டு வரும் பணிகளையும், சிறப்பு நிதியின் கீழ் ரூ. 15 கோடி மதிப்பில் சிவகாசியில் புதிய மாநகராட்சி அலுவலகம், வணிக வளாகம் கட்டப்பட்டு வருவதையும், அண்ணாமலை நாடார் உண்ணாமலை அம்மாள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கலைஞர் நகர்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 2. 61 கோடி மதிப்பில் அறிவுசார் மையம் கட்டப்பட்டுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். ஆய்வின் போது ஆணையாளர்கிருஷ்ணமூர்த்தி, துணை மேயர் விக்னேஷ்பிரியா, பொறியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி