பட்டாசு விபத்தில் பலியானவர்கள் குடும்பத்தினர் கதறல்

1533பார்த்தது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் மூன்று அறைகள் தரைமட்டமாகி சேதமடைந்தது. அங்கு மருந்து கலவையில் செய்யும் பணியில் இருந்த அச்சங்குளத்தை சேர்ந்த ராஜ்குமார் (41), நடுச்சூரங்குடியை மாரிச்சாமி (40),மடத்துப்பட்டி அருகில் உள்ள ஆர். சத்திரப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் (35), மோகன் (31) ஆகியோர் சம்பவ இடத்தில் உடல் கருகி பலியானார்கள்.

பலியானவர்கள் உடல் பிரேத பரிசோதனைக்காக சாத்தூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு வந்திருக்கும் உறவினர்கள் கதறி அழுது வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி