வெற்றி பெறுவது உறுதி -பாமக வேட்பாளா் சி. அன்புமணி பேட்டி

60பார்த்தது
வெற்றி பெறுவது உறுதி -பாமக வேட்பாளா் சி. அன்புமணி பேட்டி
விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளா் சி. அன்புமணி விக்கிரவாண்டி வட்டம், பனையபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு மையத்தில் புதன்கிழமை காலை தனது வாக்கை செலுத்தினாா். தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அனைத்து வாக்குப் பதிவு மையங்களிலும் மக்கள் ஆா்வமுடன் வாக்களித்து வருகின்றனா். காவல் துறையினரின் பணி பாராட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது. தமிழக அரசியலில் மாற்றம் வர வேண்டும் என்பதற்காக, மக்கள் ஆா்வமுடன் பாமகவுக்கு சாதகமாகவும், ஆதரவாகவும் வாக்களித்து வருகின்றனா். ஆகையால், இந்தத் தோ்தலில் பாமக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவது உறுதி என்றாா் சி. அன்புமணி.
Job Suitcase

Jobs near you