ஷேர் ஆட்டோவில் மணல் கடத்தியவர் கைது!

50பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே கவுண்டன்யா ஆற்றில் இருந்து மணல் கடத்தப்படுவதாக வந்த ரகசிய தகவலின் அடிப்படையில் குடியாத்தம் நகர போலீசார் சீவூர் அருகே வாகன சோதனை ஈடுபட்டனர்.

அப்போது வேகமாக வந்த ஆட்டோ ஷேர் ஆட்டோவை தடுத்து நிறுத்தி சோதனை செய்ததில், அதில் மணல் மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து மணலை கடத்தி வந்த மகேந்திரன் (33) என்பவரை கைது செய்த போலீசார் ஆட்டோவுடன் மணல் மூட்டைகளை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி