பள்ளிகொண்டாவில் போதை மாத்திரைகள் பறிமுதல் - இருவர் கைது!

81பார்த்தது
வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா பகுதியில் உள்ள தென்னந்தோப்பில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக பள்ளிகொண்டா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது தகவலின் அடிப்படையில் பள்ளிகொண்டா போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மஞ்சுநாத் திருமண மண்டபம் பின்புறம் உள்ள தென்னந்தோப்பில் சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு வாலிபர்கள் சுற்றிதிரிவதை கண்டு போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அவர்களிடமிருந்து கை பையில் மறைத்து வைத்திருந்த சுமார் 1 கிலோ 150 கிராம் எடை கொண்ட கஞ்சா மற்றும் 4 அட்டை 40 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர்கள் பள்ளிகொண்டா அடுத்த கேமரான்பேட்டை பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் வயது 25 மற்றும் கீழச்சூர் பகுதியைச் சேர்ந்த கார்த்தி வயது 25 என்பது தெரியவந்தது.

முதற்கட்ட விசாரணையில் ஆந்திர மாநிலம் பலமனேரி பகுதியிலிருந்து கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை கடத்தி வந்து பள்ளிகொண்டா பகுதியில் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்தது.

இதனையடுத்து இருவரையும் போலீசார் கைது செய்து இருவர் மீதும் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் சிறையில் அடைத்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி