உங்கள் பகுதியில் குப்பையா? - 1913 எண்ணை அழைக்கலாம்

775பார்த்தது
உங்கள் பகுதியில் குப்பையா? - 1913 எண்ணை அழைக்கலாம்
தீபாவளி பண்டிகை நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. தமிழ்நாட்டில் காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகளை வெடித்துக் கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. இந்நிலையில், சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், “உங்கள் பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் இருந்தால் 1913 என்ற இலவச எண்ணை அழைக்கலாம். பட்டாசு கழிவுகளுக்கு தனிக்குழு, வழக்கமான குப்பைகளை அகற்றுவதற்கு தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.