மாரியம்மனுக்கு சிறப்பான அலங்காரம்

53பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம், வேங்கிக்கால்- புதூர் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவிலில் இன்று கூழ் வார்த்தல் திருவிழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமிக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. பின்பு மதியம் பொதுமக்கள் அனைவரும் ஊர்வலமாக சென்று மாரியம்மனுக்கு கூழ்வார்த்து நேர்த்திக்கடன் செய்தனர்.
இதில் குழந்தை வரம் வேண்டி வேப்பிலையில் சேலை அணிந்து பெண்கள் ஊர்வலம் வந்தனர். இதைதொடர்ந்து மாரியம்மன் பூங்கரகம் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு ஊர்வலமாக வந்தது. வீடுதோறும் கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்து அம்மனை வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you