நகை பறிப்பு - பெண் உட்பட 6 பேர் கைது

1913பார்த்தது
பல்லடம் அருகே விவசாய தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண்ணிடம் ஒன்பது சவரன் தங்க நகை பறித்த சம்பவத்தில் ஒரு பெண் உட்பட ஆறு பேர் கைது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த பொங்கலூர் பொல்லிக்காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி 50. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு விவசாயத் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த இரண்டு மர்ம நபர்கள் தனலட்சுமியிடம் பேச்சு கொடுப்பது போல் பாசாங்கு செய்து அவரிடம் இருந்து தங்கச் செயின், வளையல்கள் மற்றும் மோதிரம் என ஒன்பது சவரன் தங்க நகைகளை பறித்துக் கொண்டு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது.

மேலும் இச்சம்பவம் குறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த அவிநாசிபாளையம் போலீசார் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் இச்சம்பவத்தில் தொடர்புடைய ஆனந்தகுமார் 45, சுரேந்தர் 28, ரூபன் என்கிற அமிர்த ரூபன், ரமேஷ் என ஒரு பெண் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். மேலும் இவர்கள் திட்டமிட்டு தனலட்சுமியிடம் தங்க நகை கொள்ளையடித்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து 9 சவரன் நகை மற்றும் திருட்டு சம்பவத்திற்கு பயன்படுத்திய இரண்டு இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருப்பூர் மாவட்ட சிறையில் அடைத்தனர்.
Job Suitcase

Jobs near you