திருப்பூர் மாவட்டம் தாராபுரம் மதுவிலக்கு காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி மதுவிலக்கு காவல் ஆய்வாளர் கோவர்த்தனாம்பிகை தலைமையில் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமார் சிறப்பு உதவி ஆய்வாளர் சிவராஜ் மற்றும் சரவணன் தலைமை காவலர் பாண்டிச்செல்வம் ஆகியோர் காங்கேயம் வீரணம் பாளையம் அடுத்த சேமலைவலசில் கள்ளசாராயம் காய்ச்சி விற்பனையில் ஈடுபட்ட விஸ்வநாதன் 52 என்பவரை கைது செய்து 2 லிட்டர் சாராயம் மற்றும் 20 லிட்டர் சாராய ஊரலை பறிமுதல் செய்து அழித்தனர்.