எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை மனு

50பார்த்தது
எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை மனு
திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் மண்டலம் மூன்று குப்பை கிடங்கில் மீத்தேன் திட்டம் கூடாது என எஸ்டிபிஐ கட்சி சுற்றுச்சூழல் அணி வலியுறுத்தல்

திருச்சி மாநகராட்சி அரியமங்கலம் கோட்டம் மண்டலம் 3 ல் அமைந்துள்ள குப்பை கிடங்கு முழுவதும் சுத்தம் செய்யப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்காக விடப்படும் என்று கடந்த 2019 ஆம் ஆண்டு சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டம் தீட்டப்பட்டு குப்பைகள் மறுசுழற்சி செய்யப்பட்டு வந்தது. ஏறத்தாழ முக்கால்வாசி குப்பைகள் அகற்றப்பட்ட சூழ்நிலையில் கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பாக குப்பையில் இருந்து மீத்தேன் எடுக்க போகிறோம் என்று கூறி ஒரு அறிவிப்பு தினசரி நாளிதழில் வந்தது.

மீண்டும் இப்படி ஒரு திட்டம் இந்த பகுதியில் செயல்படுத்தப்பட்டால் இந்த பகுதியில் சுற்றுச்சூழல் பாதிக்கப்படும். எனவே மாநகராட்சி மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று கோரி அரியமங்கலம் கோட்டம் மண்டலம் மூன்றின் உதவி ஆணையர் அவர்களிடம் எஸ் டி பி ஐ கட்சியின் சுற்றுச்சூழல் அணி சார்பில் மாவட்டத் தலைவர் எஸ் எஸ் ரஹமத்துல்லா கோரிக்கை மனு அளித்தார். உடன் திருவரம்பூர் தொகுதி தலைவர் அப்பாஸ் பொருளாளர் சாதிக் பாட்சா மற்றும் ஊடக அணி மாவட்ட செயலாளர் பாபு ஆகியோர் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி