கல்லூர் பட்டி பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் குண்டு - புகார்

58பார்த்தது
திருச்சி மாவட்டம் முசிறி அருகே தொட்டியம் தாலுகா கல்லூர் பட்டி கிராமத்தில் பைனான்சியர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக எழுந்த புகாரின் பேரில் போலீசார் சம்பவ இடத்தில் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொட்டியம் தாலுகா கல்லூர் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கந்தசாமி அவரது மகன் ராம்குமார் (34) இவர் ஏல சீட்டு மற்றும் பைனான்ஸ் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு இவரது வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக ராம்குமார் 100 என்ற எண்ணை அழைத்து போலீஸ் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
புகாரின் பேரில் திருச்சி போலீஸ் ஏ டி எஸ் பி குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் தடயவியல் நிபுணர் மற்றும் போலீஸ் நாயுடன் சம்பவ இடத்திற்கு வந்தனர். ராம்குமார் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. கொடுக்கல் வாங்கல் தகராறு காரணமாக பெட்ரோல் கொண்டு வீசப்பட்டதா? அல்லது வரவு செலவு பிரச்சனையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டது போல் நாடகம் நடத்தப்பட்டதா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து போலீசார் மூன்று பேரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்
கொண்டுள்ளனர்.
இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.