தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் நிவாரணம்

51பார்த்தது
தீ விபத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வட்டாட்சியர் நிவாரணம்
திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறி வட்டம், தாத்தையங்கார்பேட்டை பகுதி, மோருப்பட்டி கிராமத்தில் இரவு சுமார் 8. 30 மணி அளவில் ஆறுமுகம் என்பவரது கூரை வீட்டில் மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்தது அதன் விளைவாக மேற்படி வீட்டில் உள்ள எரிவாயு உருளையிலிருந்து வெளிவரும் குழாய் வெடித்து ஆறுமுகம் என்பவரது கூரை வீடும் அவரது வீட்டின் அருகில் உள்ள செல்வராஜ் என்பவரது கூரை வீடு முற்றிலும் எரிந்து விட்டது. மேற்படி சம்பத்தினால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வட்டாட்சியர் சுந்தரபாண்டியன் நிவாரணம் வழங்கினார்.

தொடர்புடைய செய்தி