முசிறியில் சார்பதிவாளர் அலுவலகம் கட்ட பூமி பூஜை

1515பார்த்தது
முசிறியில் ஒரு கோடி 60 லட்சம் மதிப்பீட்டில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளை எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் தொடங்கி வைத்தார். திருச்சி மாவட்டம் முசிறியில் புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. அப்போது முசிறி தொகுதி எம்எல்ஏ காடுவெட்டி தியாகராஜன் பங்கேற்று சுமார் ரூஒரு கோடியே 60 லட்சம் மதிப்பிலான புதிய சார் பதிவாளர் அலுவலக கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகளை தொடங்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர்மன்ற தலைவர் கலைச்செல்வி, நகர செயலாளர் சிவக்குமார், தாசில்தார் பாத்திமா சகாயராஜ் ஆகியோர் முன்னிலை வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் கட்டிட கட்டுமானம் மற்றும் பராமரிப்பு அலுவலக உதவி செயற்பொறியாளர் சரளா, உதவி பொறியாளர் பத்மாவதி , சார் பதிவாளர் அலுவலக தலைமை எழுத்தர் முருகேசன் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி