மினி பேருந்து மோதிய விபத்தில் பைக் ஓட்டுனருக்கு விபரீதம்

65பார்த்தது
துறையூர் அருகே உள்ள வேங்கடத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன் இவர் தனது இருசக்கர வாகனத்தில் வேங்கடத்தனூர் பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது எதிரே வந்த தனியார் மினி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்த பாலமுருகன் வலது காலில் காயமடைந்து துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த விபத்து சம்பவம் குறித்த புகாரின் பேரில் விபத்தை ஏற்படுத்திய தனியார் மினி பேருந்து ஓட்டுநரான வேங்கடத்தனூரைச் சேர்ந்த பாலு என்பவர் மீது வழக்கு பதிவு செய்து துறையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி