திடீரென வெடித்த டயர்.. விபத்தில் சிக்கிய லாரி..

66பார்த்தது
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ-பிரயாக்ராஜ் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரியின் டயர் திடீரென வெடித்தது. இதனால், கட்டுப்பாட்டை இழந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனைப் பார்த்த அங்கிருந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் மீட்புக் குழுவினர், விபத்தில் சிக்கிய ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி