வண்ணாரப்பேட்டை: ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்

5771பார்த்தது
வண்ணாரப்பேட்டை: ரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர்
பழைய வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் தெருவை சேர்ந்த புறா வளர்க்கும் சோபன் வயது 27 என்பவர் திருவொற்றியூர் ராஜா சண்முகம் நகருக்கு கேசிபி சாலை வழியாக வந்துள்ளார். அப்போது பிரசாத்தை பார்த்தவுடன் இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது சோபன் பிரசாத்தை பீர்பாட்டிலால் தலையில் தாக்கி பிரசாத்தின் இரண்டு சக்கர வாகனத்தையும் பிடுங்கி வைத்துக் கொண்டார்.

ரத்த வெள்ளத்தில் பிரசாத் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தான் தாக்கப்பட்டது குறித்து தனது நண்பர்களான ஜோதிபாசு வயது 26 சுரேஷ் வயது 23 நிர்மல் குமார் வயது 22 ஆகியோரிடம் பிரசாத் கூறியுள்ளார். நண்பனை தாக்கிய சோபனை தேடி ஆயுதங்களோடு மூன்று பேரும் வந்துள்ளனர். அப்போது திருவெற்றியூர் மேற்கு மாடவீதி அருகில் சோபன் நின்று கொண்டிருந்தார் அவர்கள் ஆவேசமாக மூன்று பேரும் சோபனை தாக்கியுள்ளனர்.

ஜோதிபாசு தன்னிடம் இருந்த கத்தியால் சோபன் கழுத்தில் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் சோபன் ரத்த வெள்ளத்தில் பிணமானார். இது குறித்து தகவல் அறிந்த திருவெற்றியூர் ஆய்வாளர் காதர் மீரா அந்தப் பகுதியில் சுற்றி கொண்டிருந்த குற்றவாளிகளை கைது செய்தார். இதில் ஜோதிபாசு ஏற்கனவே திருப்போரூரில் ஒரு கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ளவர் என தெரிய வந்துள்ளது.

முன்விரோதம் காரணமாக போதையில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி