ஆவடி அடுத்த பட்டாபிராம் வள்ளலார் நகரை சேர்ந்த தேவன் (வயது 50). இவர் நேற்று காலை வீட்டருகே நடந்து சென்றார். அப்போது அடையாளம் தெரியாத தனியார் பேருந்து ஒன்று ரிவர்ஸ் எடுத்த போது தேவன் மீது மோதி உயிரிழந்தார்.
தகவல் அறிந்த ஆவடி
போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தப்பி ஓடிய பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.