நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கரடி நடமாட்டம் இருப்பதாக பொதுமக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இது குறித்த வீடியோ வைரலானது. இந்த நிலையில் வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று இரவு விடிய விடிய கரடி நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்தனர்.