தியானம் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்

68பார்த்தது
தியானம் செய்வதால் கிடைக்கும் எண்ணற்ற பலன்கள்
யார் கடவுளை இடையறாது தியானிக்கின்றாரோ அவர் முற்றிலும் பயமற்றவர் ஆகிறார். விவேகம் என்னும் கதவை திறக்கும் வழி தியானம் ஆகும். தியானம் அமைதியை நல்குகின்றது. தியானம் முகத்தில் ஆன்மீக ஒளியை தருகிறது. மனதை சமநிலையில் வைக்க உதவுகின்றது. தன்னம்பிக்கையை அதிகரிக்கின்றது. தீய ஆசைகள் மற்றும் உணர்ச்சிகள் கட்டுக்குள் வருகிறது. ஞானத்தின் திறவுகோலாக தியானம் அமைகிறது. வேறு எந்த வழியிலும் கிடைக்காத ஓய்வு தியானம் மூலம் கிடைக்கின்றது. அன்பு, தூய்மை, பொறுமை, பணிவு, உண்மை போன்ற நற்குணங்கள் செழிக்கின்றன.