காதலனுடன் தீக்குளித்த காதலி.. இறுதியில்..

61பார்த்தது
காதலனுடன் தீக்குளித்த காதலி.. இறுதியில்..
மயிலாடுதுறையில் கடந்த 9ம் தேதி இளம் பெண் சிந்துஜா தன் மீதும் மற்றும் தனது காதலன் ஆகாஷ் மீதும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து இருவரும் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேறு ஒரு பெண்ணுடன் ஆகாஷ் பழகிய ஆத்திரத்தில் இப்படி செய்ததாக சிந்துஜா வாக்குமூலம் அளித்துள்ளார்.