இளைஞரை சுற்றி வளைத்து வெட்டிக் கொன்ற கும்பல்

57பார்த்தது
இளைஞரை சுற்றி வளைத்து வெட்டிக் கொன்ற கும்பல்
சிவகங்கையை சேர்ந்த செல்லத்துரை என்பவரின் மகன் நிதிஷ் (24). இவரை நேற்று (மே 19) இரவு 6 பேர் கொண்ட கும்பல் அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பலத்த காயமடைந்த நிதிஷை அங்கிருந்தவர்கள் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிவகங்கை போலீஸார் விசாரித்து வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.