தீயணைப்புதுறை சார்பில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை

53பார்த்தது
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உமையாள்புரம் ஊராட்சியில் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை சார்பில் 
நீர் நிலைகளில் எதிர்பாராத விதமாக ஏற்படும் விபத்துகளை தடுப்பதற்கு  தேவையான விழிப்புணர்வு
ஒத்திகை நிகழ்ச்சி நடை பெற்றது.
ஒத்திகையின்போது, மழை வெள்ளகாலத்தில் தண்ணீரில் சிக்கினால் தேங்காய் மிதவை, பிளாஸ்டிக் குடம், தண்ணீர் கேன் போன்றவற்றை பயன்படுத்தி எவ்வாறு தப்பிப்பது குறித்து செயல் விளக்கத்தை தீயணைப்பு வீரர்கள் செய்து காட்டினார்
மேலும் மழை வெள்ளம் காலங்களில் தகவல் பரிமாற்றம், உயிர் சேதம், பொருள் சேதம் தவிர்ப்பது குறித்து பொது மக்களுக்கு விளக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் உமையாள்புரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டனர்.