தஞ்சை மாவட்டம் ஊரணிபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (வெள்ளிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே இந்த துணை மின் நிலையத்திலிருந்து மின் வினியோகம் பெறும் ஊரணி புரம், பாதிரங்கோட்டை, நம்பிவயல், கொள்ளுக்காடு, காட்டாத்தி, வெட்டுவாக்கோட்டை, அக்கரைவட்டம், தளிகைவிடுதி, உஞ்சியவிடுதி, காரியாவிடுதி, கலியரான்விடுதி, சிவவிடுதி, ராங்கியன்விடுதி, திருவோணம், தோப்புவிடுதி, பின்னையூர், சில்லத்தூர், வெட்டிக்காடு, சங்கரநாதர் குடிக்காடு, வடக்குக்கோட்டை, தெற்குக்கோட்டை, திருநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது. இந்த தகவலை ஒரத்தநாடு ஊரக மின்வாரிய உதவி செயற் பொறியாளர் தமிழரசி தெரிவித்துள்ளார்.