காரும் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்து

1574பார்த்தது
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே திருச்சி -ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் மாவட்டம் குளித்தலையில் இருந்து ஆர். எஸ் மங்கலத்திற்கு சாருகேசன், ஐஸ்வர்யா. நந்தகுமார், கல்பனா மற்றும் நான்கு வயது குழந்தை ஆகியோர் காரில் சென்றனர்.

தேவகோட்டையில் இருந்த கல்லலுக்கு மருங்கிபட்டியை சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் டாட்டா ஏசி வாகனத்தில் சென்றார் முள்ளிக்குண்டு என்ற இடத்தில் எதிர்பாராத விதமாக காரும் டாட்டா ஏசி வாகனமும் நேருக்கு நேர் மோதியது.

இதில் காரில் சென்றவர்களுக்கு காயம் ஏற்பட்டது சம்பவம் அறிந்து வந்த ஆறாவயல் காவல்துறையினர் காயப்பட்டவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து விசாரணை.

தொடர்புடைய செய்தி