9 இடங்களில் நாளை சிறப்பு முகாம்

3629பார்த்தது
9 இடங்களில் நாளை சிறப்பு முகாம்
"மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் 15வது நாளான வருகின்ற 05. 01. 2024 அன்று 8 இடங்களில் முகாம்கள் நடைபெறவுள்ளன. இதுகுறித்து மாவட்ட திரு. செ. கார்மேகம், இ. ஆ. ப. , அவர்கள் தெரிவித்துள்ளதாவது: ஆட்சித்தலைவர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் "கள ஆய்வில் முதலமைச்சர்" என்ற முன்னெடுப்பின் நீட்சியாக, அன்றாடம் அரசு துறைகளை அணுகும் பொது மக்களுக்கு அரசு அலுவலகங்கள் வழங்கும் சேவைகளை மேலும் செம்மைப்படுத்தி அரசின் சேவைகள் விரைவாகவும் எளிதாகவும் சென்று சேரும் வண்ணம் "மக்களுடன் முதல்வர்" "இல்லம் தேடி சேவை" என்ற புதிய திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீர்மிகு இத்திட்டத்தினை சேலம் மாவட்டத்தில் முதற்கட்டமாக சேலம் மாநகராட்சி, அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் நகரங்களை சுற்றியுள்ள கிராம பஞ்சாயத்து பகுதிகளில் சிறப்புடன் செயற்படுத்திட 18. 12. 2023 முதல் 06. 01. 2024 வரை 16 வேலை நாட்களில் 142 முகாம்களை நடத்த 142 உரிய இடங்கள் தெரிவு செய்யப்பட்டு, சீரிய முறையில் நடத்திட முகாம் கண்காணிப்பு அலுவலர்கள் (NODAL OFFICERS) மற்றும் முகாம் பொறுப்பு அலுவலர்கள் (INCHARGE OFFICERS) நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி