ஆலங்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!

58பார்த்தது
ஆலங்குடி அருகே குடிநீா் கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
ஆலங்குடி அருகேயுள்ள கீழாத்தூரில் குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கீழாத்தூா் ஊராட்சி வாழமங்கலம் பகுதி மக்களுக்கு பல மாதங்களாக சரிவர குடிநீா் வழங்கப்படவில்லையாம். இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிா்வாகத்திடம் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட வில்லையாம். இதனால், உடனே குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் வாழமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து தகவலறிந்து அங்கு சென்ற வடகாடு போலீஸாா் மற்றும் ஊராட்சி நிா்வாகத்தினா் குடிநீா் வழங்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா். இந்த மறியல் போராட்டத்தால் ஆலங்குடி- பேராவூரணி மற்றும் பட்டுக்கோட்டை சாலையில் சுமாா் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி