

நாகை: அரசு கல்லூரி ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு பள்ளி கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திமுக 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி 70 வயதை கடந்த ஓய்வுபெற்றோர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தியும், மருத்துவ காப்பீடு திட்டத்தில் முழு செலவையும் தமிழக அரசு ஏற்க வலியுறுத்தியும் இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.