அஞ்சலகங்களில் வெளிநாட்டு தபால் புக்கிங் வசதி

562பார்த்தது
அஞ்சலகங்களில் வெளிநாட்டு தபால் புக்கிங் வசதி
மதுரை: மதுரை அஞ்சல் அலுவலகங்களில் வெளிநாட்டு தபால்கள் புக்கிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


இது குறித்து அஞ்சலகத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் மதுரை கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் வெளிநாட்டு தபால் புக்கிங் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் வெளிநாட்டில் உள்ள தங்கள் உறவினர்களுக்கு கீழ்கண்ட வகையில் தபால்கள் அனுப்பி கொள்ளலாம் பதிவுத்தபால்கள் இரண்டு கிலோ வரையிலும் ஸ்பீடு தபால்கள் 35 கிலோ வரை பார்சல் 20 கிலோ வரை சில நாடுகளுக்கு மட்டும் அந்த நாடுகளில் பரிந்துரைக்கப்பட்ட எடை அளவில் மற்றும் ஐ டி பி எஸ் 2 கிலோ வரை குறிப்பிட்டு (16 நாடுகளுக்கு மட்டும்) என பொதுமக்கள் புக்கிங் செய்யலாம் மதுரை சேதுபதி பள்ளி அருகே உள்ள மதுரை தலைமை அஞ்சலகம், அரசரடி தலைமை அஞ்சலகம், முனிச்சாலை அஞ்சலகம், திருமங்கலம் அஞ்சலகம், தல்லாகுளம் தலைமை அஞ்சலகம், காந்தி நகர் அஞ்சலகம், மேலூர் அஞ்சலகம், மதுரை பேலஸ் அஞ்சலகம், ஆகிய அஞ்சல் அலுவலகங்களில் பார்சல் பேக்கிங் வசதியும் உள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டேக்ஸ் :