சென்னை பல்கலைக்கழகம் 2024-2025 கல்வியாண்டு முதல் பல்கலைக்கழகத் துறைகள், இணைப்புக் கல்லூரிகள் மற்றும் அதன் ஆராய்ச்சி நிறுவனங்களில் M.Phil பட்டப்படிப்பை நிறுத்துவதற்கான முடிவை அறிவித்துள்ளது. பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த பல்கலைக்கழக சிண்டிகேட் கூட்டத்தில் இந்த அறிவிப்புத் தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டது. முந்தைய கல்வி ஆண்டுகளில் அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் M.Phil படிப்பை முடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.