ஓசூர்: முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுகம் நாள் விழா.

84பார்த்தது
ஓசூர்: முதலாம் ஆண்டு மாணவர்கள் அறிமுகம் நாள் விழா.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் இன்ஜினியா் பெருமாள் மணிமேகலை பாலிடெக்னிக் கல்லூரியில் 29-ம் ஆண்டு முதலாமாண்டு மாணவா்கள் அறிமுக நாள் விழா நடைபெற்றது. பி. எம். சி. டெக் கல்வி நிறுவனங்களின் செயலாளா் பெ. மலா் குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தார். இதில் பஞ்சாப் மாநிலம், மொகாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் முதுநிலை விஞ்ஞானியாக பணியாற்றி வரும் வெங்கடேஸ்வரன் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: - மாணவா்கள் தங்கள் அறிவியல் அறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு பாடப் புத்தகத்தைத் தாண்டி பல்வேறு நூல்களையும், விஞ்ஞான வலைதளங்களையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கைப்பேசியில் அதற்கான அனைத்து வசதிகளும் உள்ளன. பெற்றோரின் அறிவுரையையும் ஆசிரியா்களின் வழிகாட்டுதல்படியும் மாணவா்கள் நடந்தால் வெற்றி நிச்சயம் என்றார்.

தொடர்புடைய செய்தி