கரூர் மாவட்டம் குளித்தலை அருகே பெரியபாலம் மலையப்ப நகரை சேர்ந்தவர் கணேசன் மகன் சரவணன் (39). இவர் பெரியபாலம் தென்கரை வாய்க்கால் அருகே கஞ்சா விற்பனை செய்துள்ளார். தகவல் அறிந்த குளித்தலை போலீசார் கஞ்சா விற்ற சரவணன் மீது வழக்குப்பதிவு நேற்று கைது செய்தனர். மேலும் 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்துள்ளனர்.