குமரி - வாலிபர் படுகொலை

1556பார்த்தது
குமரி மாவட்டம் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை அருகே திருவனந்தபுரம் நாகர்கோவில் தேசிய நெடுஞ்சாலை ஒற்றாமரம் பகுதி உள்ளது. இந்த பகுதியை ஒட்டி இயங்கி வரும் பெட்ரோல் பங்க் எதிரில் கேரள பதிவெண் கொண்ட சொகேசு கார் ஒன்று நேற்று நள்ளிரவு வந்துள்ளது.

இந்த கார் பலமணி நேரமாக அந்த பகுதியில் நிறுத்தி விடப்பட்டிருந்ததால் சந்தேகமடைந்த பொதுமக்கள் களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து உள்ளனர். தகவலறிந்து வந்த போலீசார் அந்த வாகனத்தின் உள்ளே பார்த்தபோது முன்பக்க டிரைவர் இருக்கையில் ஒருவர் தலை சாய்ந்தபடி இருந்துள்ளார்.

அவரை போலீசார் எழுப்ப பலமுறை முயன்றும் முடியாமல் போக காரின் கதவை திறந்து பார்த்தபோது அந்த நபரின் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த நிலையில் காணபட்டுள்ளார், தொடர்ந்து அந்த நபர் யார் எங்கிருந்து வந்தார் யார் இவரை கொலை செய்து இருப்பார்கள் என்ற கோணத்தில் விசாரணை நடத்தியதோடு அந்த பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்து வந்தனர்.

இந்த நிலையில் போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் படுகொலை செய்யப்பட்ட நபர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த பாப்பனங்கோடு பகுதியை சேர்ந்த கல்குவாரி உரிமையாளர் தீபு 45, என்பதும் புதியதாக தனது கல்குவாரிக்கு ஜேசிபி இயந்திரம் வாங்க சென்னைக்கு செல்ல வீட்டில் இருந்து பத்து லட்சம் ருபாய் பணத்துடன் வந்ததும் தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்தி