சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினம்

75பார்த்தது
சர்வதேச போதைப்பொருள் விழிப்புணர்வு தினம்
கன்னியாகுமரி மாவட்டம்
கிரேஸ் கல்வியியல் கல்லூரியில் சர்வதேச போதை பொருள் விழிப்புணர்வு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. மாணவ ஆசிரியர் அமித் ஷாஜி இறை வாழ்த்து பாடினார். மாணவ ஆசிரியர் அபிலாஷ் வரவேற்றார். கல்லூரியின் தாளாளர் திருமதி கீதா பான்ஸ் தலைமையுரையாற்றினார். விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஹெலன் பிறேம லதா முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினரை பேராசிரியர் அனுஷா அறிமுகம் செய்தார். சிறப்பு விருந்தினராக மாராயபுரம் தெற்கு திருவிதாங்கூர் கிராமப்புற மேம்பாட்டு நிறுவன திட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. சஜி கலந்து கொண்டார். கல்லூரியின் நிர்வாகி டாக்டர். மத்தியாஸ், பேராசிரியர் விஜிலா ராணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். மாணவ ஆசிரியர் ஆசிகா தேவி நன்றி கூறினார். நிகழ்ச்சிகளை பையோசிலின் ஜெனிலா தொகுத்து வழங்கினார்.