இளைஞர் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம்

81பார்த்தது
மத்திய பாஜக அரசு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுக் கொடுக்காமல் அவர்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்துகிறது

இளைஞர் காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய் வசந்த் எம். பி பேச்சு



கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த ஞாறான்விளையில் நேற்று நடைபெற்ற குமரி மேற்கு மாவட்ட இளைஞரணி செயல் வீரர் கூட்டத்திற்கு, மேற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் திபாகர் தலைமை தாங்கினார். கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் கலந்து கொண்டு பேசினார், கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் லாரன்ஸ், மாவட்ட கவுன்சிலர் அம்பிளி , அறங்காவல் குழு உறுப்பினர் ஜோதீஸ்குமார் , விவசாய பிரிவு மாவட்ட தலைவர் எபனேசர், வழக்கறிஞர் சாலின், வட்டாரத் தலைவர்கள் ரவிசங்கர், ராஜசேகர் , ஜெபா உட்பட ஏராளமான ஒரு கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி